றம்பொடை பேருந்து விபத்து விசேட விசாரணையை ஆரம்பித்த பொலிஸார்
கொத்மலையின் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்து குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள், குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
குழுவின் அதிகாரிகள், பேருந்து விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் சிக்கிய பேருந்தையும் ஆய்வு செய்வதற்காக இன்று கொத்மலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர், மூத்த பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சட்டத்தரணி ருவான் குணசேகர உள்ளிட்ட குழுவினர் கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள்
இதன்போது பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam