வன்னியில் நடந்த இரட்டை உளவாளிகளின் ஊடுருவல்கள்! இதுவரை வெளிவராத பல தகவல்களை வெளியிட்ட மூத்த போராளி
தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த மக்களிடமிருந்து உருவாகினார்களோ அந்த மக்களுடன் இறுதிவரை கூடவே இருந்து போராடினார்களே தவிர, யாரையும் மனித கேடயமாக அவர்கள் பயன்படுத்தவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளி முல்லைமதி தெரிவித்திருக்கிறார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன்போது பேசிய அவர்,
வன்னிப் பகுதியில் நடந்த இரட்டை முகவர்களின் ஊடுருவல்கள், இரட்டை உளவாளிகளின் செயல்பாடுகள், புலிகள் போன்று வேடமிட்டவர்களின் நரித்தனங்கள், என்று இறுதிக் கட்டப் போரில் இதுவரை வெளிவராத பல தகவல்களை எமது ஐபிசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அவர் தெரிவித்த பல தகவல்கள் காணொளி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது,