பிரமிட் திட்ட மோசடியில் சிக்கிய சீன பிரஜைகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாரிய சர்வதேச பிரமிட் திட்டத்தில் இலங்கையை மையமாக கொண்டு செயற்பட்ட சீன பிரஜைகள் குழு தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றசெயல் தொடர்பில் நேற்று (07.09.2023) நீதிமன்றில் அறிவித்தபோதே பொலிஸார் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சுமார் முப்பது சீன பிரஜைகள் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு வந்து இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மக்களை இலக்கு வைத்து இந்த சர்வதேச பிரமிட் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயணத்தடை
இந்த பிரமிட் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட சீன சந்தேக நபர் ஒரு நாளைக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் என சந்தேக நபர் கொழும்பு மற்றும் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 8 சொகுசு வீடுகளை வாங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சர்வதேச பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவரை விசாரணை செய்த போலீசார், அந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 30 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 7 மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த பிரமிட் திட்டத்தில் அதிகளவானோர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், தற்போது இதில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு சீன பிரஜைகள் மற்றும் காலி பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்யுமாறு நீதிமன்றில் கோரியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
கூறப்பட்ட திட்டம். சந்தேகநபர்கள் ஐவரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.
கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் குமார நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தார்.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
