கிழக்கு மாகாண நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை
கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களில் விசேட போதைப் பொருள் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பெயரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்றையதினம் (29.12.2023) வெள்ளிக்கிழமை இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில், விசேட மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட அதிரடிப் படையினர் குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்துடன், தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் பரிசோதனை மட்டக்களப்பு மாவட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், நகருக்குள் வரும் சகல பொதுமக்களின் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் அவர்களது பயணப் பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 பேர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போதைப் பொருள் பரிசோதனை பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
