நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்
நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் நடாத்தப்பட உள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த குழுவினால் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வுகள் நடாத்தப்படவுள்ள நிலையில், நாட்டில் கோவிட் பெருந்தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு இன்றைய தினம் அமர்வுகள் பற்றி தீர்மானிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கடந்த வாரமும் நாடாளுமன்ற அமர்வுகள் இரண்டு நாட்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.