கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்
கடற்றொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (18.04.2024) காலை 10 மணிமுதல் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
கடற்றொழிலாளர்கள் சார்ந்த புதிய சட்டமூல வரைபொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.
சட்டமூலம் தொடர்பான கருத்து
இது தொடர்பாக மாவட்ட ரீதியாக கடற்தொழில் சம்மேளனங்கள் ஊடாக பிரதிநிதிகளுடன் இணைந்து சட்டமூலம் தொடர்பாக கொழும்பு பணிப்பாளர் நாயகம், முன்னாள் மாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது.
இதன்படி கலந்துரையாடலில் அமைச்சின் உத்தியோகத்தர்கள் , சமாச உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
குறித்த கலந்துரையாடலில் கடற்றொழில் நடவடிக்கை உரிமம் வழங்கலின் பொதுவான கோட்பாடுகள், கடற்றொழில் உரிமத்தின் கால எல்லை, கடற்றொழில் நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல், இலங்கை நிலப்பரப்புகளில் கடற்றொழில் செயற்பாடுகளை நடாத்துவதற்கான உரிமமொன்றை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |