இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
குளியாபிட்டிய - ஷொருகம பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்றையும், சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து 31 வயதுடைய ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்
அதன்படி, NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வான் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (குளியாபிட்டிய) - 0718 591 260 பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக நிலைய பொறுப்பதிகாரி - 0773 528 325 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
