நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு! வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது உணவுப்பொருட்களின் தரம், உணவுப் பொருட்களின் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
விசேட சுற்றிவளைப்பு
இதற்கமைய, உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வோர் மற்றும் பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்வோரை தேடி இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
