ஓமிக்ரோன் திரிபு குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!
ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது.
ஓமிக்ரோன் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஓமிக்ரோன் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்துகின்றன என தென் ஆப்பிரிக்க மருத்துவர் உன்பென் பிள்ளைய் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரோன் கொரோனா பாதிப்பு அதிமாக காணப்படும் கவுதங் மாகாணத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் உன்பென் பிள்ளைய் இது பற்றி கூறியதாவது; தற்போது மிதமான பாதிப்புகளே ஏற்பட்டு இருக்கின்றன.
நோயாளிகளுக்கு காய்ச்சலுக்கு நிகரான அறிகுறிகளே காணப்படுகின்றன. வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, கடுமையான உடல் வலி போன்ற அறிகுறிகள் உள்ளன.
பெரும்பாலானோர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களை விடசெலுத்தியவர்கள் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது” என்றார்.
தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 20 மற்றும் 30 வயதில் இருப்பவர்களே. இந்த வயது வரம்பில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் மிதமாகவே இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.