பொது மக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள விசேட ஆலோசனை
பண்டிகை காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய கடைகளுக்கு செல்லும் மக்களுக்கு பொலிஸார் விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது, தமது பணப் பை மற்றும் கைப் பைகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரயில், பேருந்து, போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் போது, தங்க நகைகள், பணப் பைகள் கொள்ளையிடப்படலாம் என்பதால், அவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை,கொழும்பில் இருந்து தூர பயணங்கள் செல்லும் பேருந்துகளை கண்கானிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் கொழும்பில் இருந்து பயணிக்கும் போருந்துகளில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 52 நிமிடங்கள் முன்

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
