கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்த படகு: தேடுதல் நடவடிக்கையில் கடற்படையினர் தீவிரம்
Sri Lanka Navy
Eastern Province
By Dharu
அக்கரைப்பற்று கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்த படகு ஒன்றை தேடும் விசேட நடவடிக்கையை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
அக்கரைப்பற்று கடற்பரப்பில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று இரவு (16.07.2023) தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சொந்தமான டோரா கப்பல் மூலம் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் தேடுதல் நடவடிக்கை
எனினும் நள்ளிரவு 1 மணிக்குப் பின்னரும் தீப்பிடித்த படகு தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US