தண்ணீரூற்றில் பலா மரத்தை பாதுகாக்க காணி உரிமையாளரின் சிறப்பு செயல்
தண்ண்ரூற்றில் வெட்டிய கற்ற வேண்டிய சூழலில் இருந்த பாலா மரம் ஒன்றை பாதுகாப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
காணியில் நட்டு வளர்த்து வந்த பலாமரத்தை அகற்றி மதில் கட்டுவதை தவிர்த்து பலாமரத்தை தவிர்த்து விலக்கி மதிலை அமைத்துள்ளனர்.
கிராம சேவகரான அந்த காணியின் உரிமையாளர் மரத்திற்கு கொடுத்த முன்னுரிமையாக இதனை பலரும் பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
அபிவிருத்தி என்ற போர்வையில் பயன்தரு மரங்களை வெட்டி அகற்றும் மக்களிடையே பயன்தரு மரத்தை பாதுக்காக்க முயற்சித்தமையானது மகிழ்ச்சிக்குரியது.
அகலமாக்கப்பட்ட பாதை
தண்ணீரூற்றில் இணைப்பு சிறு வீதிகளின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றிருந்தன.அவ்வாறான ஒரு புனரமைப்பின் போது வீதி அகலமாக்கப்பட்டது.அதனால் காணியில் இருந்த பலாமரம் ஒன்றின் நேரே காணி எல்லை அமைந்து விட்டது.
காணி எல்லையில் மதிலை கட்டுவதற்கு முயன்ற போது பலாமரத்தினை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படவே அதனை தவிர்த்து மரத்தை பாதுகாக்க காணி உரிமையாளர் நடவடிக்கை எடுத்திருந்ததாக அப்பகுதி மக்களிடையே மேற்கொண்ட தேடலின் போது அறிய முடிகின்றது.
மதிலை கட்டும் போது மரத்தை அகற்றாது அதன் பிரதான நிலைக்குத்துத் தண்டினை வீதியில் பக்கமாக விட்டு மதிலை அமைந்துள்ளதனை படத்தில் காணலாம்.
கனி தரும் பலா
பலராலும் விரும்பி உண்ணப்படும் பழமாக பலாப்பழம் இருக்கின்றது என்பது வெளிப்படை.இந்த பலாப்பழத்தை தரும் மரமாக பலா மரம் இருக்கின்றது.
தண்ணீரூற்று, மாமூலை, முள்ளியவளை போன்ற இடங்களில் அதிகளவிலான பலாமரத் தோப்புக்களை காணலாம்.அதிகளவான பலாப்பழங்களை உற்பத்தி செய்யும் இடமாக இவை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பலாமரத்தடி
மாங்குளம் முல்லைத்தீவு வீதியை புளியங்குளம் முல்லைத்தீவு வீதியுடன் இணைக்கும் வீதியை முல்லைத்தீவு புளியங்குளம் வீதியை இணைக்கும் ஒரு இணைப்பு வீதியுடன் அது அமைந்துள்ளது.
தண்ணீரூற்றில் உள்ள நரசிங்கர் கோவிலடிச் சந்தியில் (நெடுங்கேணிச் சந்தி என மக்களால் அழைக்கப்படும் ) இருந்து புளியங்குளம் போகும் திசையில் 100 மீற்றர் தூரத்தில் வலது பக்கத்தில் உள்ள இணைப்பு வீதியில் உட்பக்கமாக 10 மீற்றர் தூரத்தில் இந்த காட்சியை காணலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |