மேதானந்த எல்லாவல தேரர் மீது சிறீதரன் எம்.பி சீற்றம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இரத்த களரி ஏற்படுத்துவதற்கு மதத்தலைவர்கள் தான் காரணம் எனத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
குருந்தூர் மலை காணி விவகாரம் தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் கடந்த 18.06.2023 அன்று, குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும், சிங்கள மக்களுக்குரியதும் எனப் பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார்.
அங்கே தமிழ் பௌத்தர்கள்தான் வாழ்ந்தார்கள் எனக் கடந்த கால வரலாற்றை இவர் முதலான தேரர்கள் படிக்கவேண்டும்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை செய்திகளின் தொகுப்பு,
