கலாநிதி பட்டத்தால் அநுர அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சபாநாயகர் அசோக ரங்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது.
அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சமூக சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளது.
சபாநாயகர் அசோக ரங்வல பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது.
சபாநாயகரான பதவியேற்ற இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரங்வல என்று பதிவு செய்யப்பட்டது.
கலாநிதி பட்டம்
ஆனால், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் இல்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் சமூகத்தில் விவாதம் உருவானது.

இதேவேளை, நாடாளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயருக்கு முன்னால் உள்ள கலாநிதி என்ற குறியீடு நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து சபாநாயகர் அசோக ரங்வலவிடம் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மீது மக்கள் கடும் அதிருப்பதி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri