சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் வழங்கிய முக்கிய திருத்தச் சட்டம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டத்திற்கு நேற்று (20.01.2026) ஒப்புதல் அளித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21.01.2026) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த திருத்தச் சட்டத்திற்கு (05.12.2025) அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, (07.01.2026) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
திருத்தப்பட்ட சட்டம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டத்திற்கு, 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மூலச் சட்டத்தை திருத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாகும்.
இது கடல்கடந்த வங்கி மற்றும் வரி இணக்கப்பாடு தொடர்பான ஒழுங்குமுறையை திருத்தி தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்தச் சட்டத்திட்டம் துறைமுக நகரத்தின் பொருளாதார கட்டமைப்பை உலகளாவிய வங்கித் தேவைகள் மற்றும் தேசிய நிதி ஸ்திரத்தன்மையை இக்காக கொண்டதாகும்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri