சிங்கராஜ வனப்பகுதியில் பூச்சிகளுடன் சிக்கிய ஸ்பெயின் நாட்டவர்
சிங்கராஜ வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றியுள்ள காடுகளில் பொறிகளை அமைத்து பூச்சிகளைப் பிடித்தபோது சிக்கிய வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் என கலவான வனவிலங்கு சரணாலய அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ஸ்பெயின் நாட்டவர் மூன்று நாட்களாக சிங்கராஜாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் தங்கி, பொறிகளை அமைத்து, பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளைப் பிடித்து வருவது தெரியவந்துள்ளது.
நவீன பொறிகள்
பூச்சிகளை பிடிக்கப் பயன்படுத்தப்படும் நவீன பொறிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கலவான வன பாதுகாப்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 31 வயதுடைய வெளிநாட்டு பிரஜை கலவான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        