60 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது
சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2.29 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை சூட்சுமான முறையில் மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்தி வந்த தென்னாபிரிக்க பிரஜையை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான இந்த சந்தேகநபர் கொன்யாவின் நைரோபி நகரில் தோஹா கட்டார் வழியாக இலங்கை வந்துள்ளார்.
சந்தேகநபரின் பயண பொதியை சோதனையிட்ட அதிகாரிகள் அவர் ஷாம்போ போத்தல்ளில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தென்னாபிரிக்க பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார்.