நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலர் கைது

Sri Lanka Police Jaffna Mannar Mullaitivu Sri Lanka Police Investigation
By Kajinthan Jan 05, 2023 08:54 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் பல்வேறு  குற்றச்சாட்டுக்களில் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதியில் வைத்து 6000 மில்லி லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் தலா மூவாயிரம் மில்லி லீட்டர் கசிப்பினை வீதியால் கொண்டு சென்றவேளை காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலர் கைது | Some Were Arrested Drug Charges In The Homeland

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் நூதனமான முறையில் கசிப்பை கொண்டுவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (04.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிசாரால் அரியாலை மாம்பழம் சந்தியில் வைத்து கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலர் கைது | Some Were Arrested Drug Charges In The Homeland

நெல் உமி மூடையில் நூதனமாக மறைத்து கொண்டு வரப்பட்ட கசிப்பே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும், சான்றுப் பொருட்களையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி: தீபன்

மன்னார்

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா போதைப்பொருள் நீதிமன்றத்தின் நுழைவு பகுதியில் இருந்து போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (04.01.2023) பதிவாகியுள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலர் கைது | Some Were Arrested Drug Charges In The Homeland

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கடந்த நவம்பர் மாதம் கடத்தல் ஒன்றுடன் தொடர்புப்பட்டதாக மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இரகசியமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பலர் கைது | Some Were Arrested Drug Charges In The Homeland

இந்த நிலையில் நேற்று (04.01.2023) அதே டிப்பர் வாகனத்துக்குள் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 116 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா நேற்று புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

செய்தி: ஆஷிக்

வயலுக்கு மேச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவு சந்தேக நபர் கைது 

பூம்புகார் கல்மடுப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவடைந்துள்ளது இதனடிப்படையில் வயலின் உரிமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்ற உரிமையாளர் வயல் வாடியில் வைக்கப்பட்ட முப்பது கிலோ உரம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் குழாய் பைப் என்பன திருட்டுப்போயுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். 

செய்தி  - ஷான்

கஞ்சாவுடன் இருவர் கைது 

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவரை பகுதயில் 21 மற்றும் 22 வயதுடைய இருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஒருவரிடமிருந்து 600 மில்லிக்கிராம் கஞ்சாவும் மற்றையவரிடமிருந்து ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸாரிம் பாரப்படுத்தப்பட்டனர். அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

செய்தி - கஜி

கடலட்டை பிடித்தவர்கள் கைது

 மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 09 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை மன்னார் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையின் மூலம் டைவிங் கியர், 01 டிங்கி படகு மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 168 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல்வேறு வகையான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக மன்னார் தீவைச் சூழவுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, சிட்னி, Australia

11 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை தெற்கு

11 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, வவுனியா, Drancy, France

16 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US