திருட்டை தடுப்பதற்கான சில ஆலோசனைகள்
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
கடந்த காலங்களைப் போன்றல்லாது திருடர்கள் சாமர்த்தியமானவர்களாக திகழ்கின்றனர். யாரை இலக்கு வைப்பது எப்போது திருட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
தொலைக்காட்சிகளில் குறிப்பாக நகைச்சுவை நாடகங்களில் அடிக்கடி சித்தரிக்கப்படுவதனைப் போன்று திருடர்கள் முட்டாள்தனமானவர்கள் கிடையாது. திருடர்கள், கோடிட்ட சட்டைகளையும் பெரே தொப்பிகளையும் அணிந்து கொண்டு “Swag” என பெயரிடப்பட்ட பைகளை எடுத்து கொள்ளையிடச் செல்ல மாட்டார்கள்.
திருடர்கள் சாமர்த்தியமானவர்கள். திருடர்களை இலகுவில் அடையாளம் கண்டுவிட முடியாது.
அவர்களும் ஏனையவர்கள் போன்றே சாதாரணமான தோற்றமுடையவர்கள். நூதனமான கருவிகள் மூலம் எந்தவொரு வீட்டையும் உடைத்து உங்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்பான பொருட்களை கண்டுபிடிக்கக் கூடியவர்கள்.

உங்களது வீடு இலக்கு வைக்கப்படுவதனை எவ்வாறு தடுக்கலாம்
1 நீங்கள் வீட்டுக்குள் இருந்தாலும் அனைத்து கதவுகளையும் மூடிவிடுங்கள்
2 முதலாம் மாடியின் ஜன்னல் கதவினை திறந்து வைக்க வேண்டாம்
3 உங்களது வீட்டு தபால் பெட்டியில் கடிதங்கள் நிறைந்து வழியும் வகையில் செய்ய வேண்டாம். தபால் பெட்டியில் போடப்படும் கடிதங்களை சேகரிக்கக்கூடிய மற்றுமொரு கொள்கலனை வீட்டின் உள்புறமாக தபால் பெட்டியுடன் பொருத்துங்கள்.
4 நீங்கள் வெளியே வெல்வதனை சொல்ல வேண்டாம். நீங்கள் வெளியே சென்று திரும்பும் வரையில் விடுமுறை குறித்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டாம்.
5 உங்கள் வீட்டின் முன் மற்றும் பின் புறங்களில் பாதுகாப்பு மின் குமிழ்களை பொருத்துங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் யாரும் வந்தால் அதனை கண்டு கொள்ள முடியும். நல்ல உயரத்தில் மின்குமிழ்களை பொருத்துவதன் மூலம் அதனை யாரும் சேதப்படுத்த முடியாது.
6 திருடர்கள் பொதுவாக சுலபமாக திருடுவதனையே விரும்புவர். முடிந்தளவு திருடுவதனை கடினமாக்குகள் அவ்வாறு செய்வதன் மூலம் உங்களை இலக்கு வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்துவிடும்.
நீல்காந்த் காப்பு பெட்டக வைப்பு நிறுவனம் (Neelkanth Safe Deposit Ltd) உங்களது பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாத்து வைப்பது குறித்து சிந்தியுங்கள்
அது மிகவும் பாதுகாப்பானது, நம்பகமானது, மலிவானது
இற்றைநிலை தொழில்நுட்பத்துடனான பாதுகாப்பு கட்டமைப்பினைக் கொண்டது.
24/7இ 365 நாட்களும் காவல்துறை பொறுப்புடன் கண்காணிப்பு செய்தல்.
தீ விபத்துக்களினால் பாதிப்படையாத பாதுகாப்பு பெட்டகம் மற்றும் இயற்கை அழிவுகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட அங்கத்தினர் மட்டுமே பிரவேசிக்க அனுமதிக்கப்படும்.
FCA வின் ஒழுங்குபடுத்தலுக்கு உட்பட்டது.
குற்றச் செயல்கள் குறித்து காவல்துறைக்கு அறிவித்தல்
நீங்கள் ஓர் குற்றச் செயலை கண்டால், 101 அல்லது 999 என்ற அவசர அழைப்பு இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.
குற்றச் செயல்கள் தொடர்பில் இணையம் வழியாக முறைப்பாடு செய்ய முடியும்.
http//www.met.police.uk/
அவதானமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
உங்களது பெறுமதிமிக்க பொருட்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
02088439920 (சவுத்ஹால்)
020870288888 (க்ரொய்டொன்)
நீல்காந்த் காப்புப் பெட்டக வைப்பு நிறுவனம் ஐரோப்பாவின் முன்னணி காப்புப் பெட்டக வைப்பு நிலையங்கள்