புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka Election
By Theepan Dec 22, 2023 03:39 PM GMT
Report

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (22.12.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 21.12.2023 அன்று வடக்கு - கிழக்கு நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்காக வடக்கு - கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார்.

வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்களை கண்டுகொள்ளாத அரசியல் வாதிகள்: சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்களை கண்டுகொள்ளாத அரசியல் வாதிகள்: சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

கலந்துகொள்ளாத அமைச்சர்கள்

இதில் வடக்கு மாகாணத்திலிருந்து ஈபிடிபியைச் சேர்ந்த திலீபன் என்ற உறுப்பினரைத் தவிர, வேறுயாரும் கலந்துகொள்ளவில்லை.

கிழக்கு மாகாணத்திலிருந்து சம்பந்தன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), மற்றும் கலையரசன் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் | Solution To The Ethnic Problem By New Constitution

ஆளும் தரப்பைச் சேர்ந்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தாவோ, வியாழேந்திரனோ, சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானோ இதில் கலந்துகொள்ளவில்லை.

வடக்கு - கிழக்கு அபிவிருத்தி பற்றி கலந்துரையாடுகின்ற போது, வடக்கு - கிழக்கின் அமைச்சர்களாக இருப்பவர்களே கலந்துகொள்வில்லை.

ஜனாதிபதி அவர்களின் ஏமாற்றுத்தனமான நடவடிக்கைகளை எண்ணியோ என்னவோ வடக்கு மாகாணத்திலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் தீர்வு

இத்தகைய சூழ்நிலையில்தான் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் நல்லிணக்கம் தொடர்பாகவும் கழந்துரையாடப்பட்டதாக அறிகிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபொழுது ஒரு புதிய அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான பல்வேறுபட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வரைவுகளும் மேற்கொள்ளப்பட்டது.

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் | Solution To The Ethnic Problem By New Constitution

ஆனால் ரணிலுக்கும் ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அன்றைய புதிய அரசியல் சாசனத்திற்கான முயற்சிகள் முடக்கப்பட்டது.

இப்பொழுது ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர், இனப்பிரச்சினைக்கான தீர்வின் மேல் அக்கறை உள்ள ஜனாதிபதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்.

தமிழர் தரப்புகளை அழைத்து பேசினார். நாடாளுமன்றத்தில் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளை ஆதரவளிக்கும்படி கோரினார்.அவர்களும் ஆதரவளிப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

டெல்லிக்குச் சென்றபொழுதும் பதின்மூன்றை முழுமையாக நிறைவேற்றுவதாக இந்தியப் பிரதமருக்கு உறுதிமொழி அளித்தார். அப்போது சர்வதேச அழுத்தங்கள் வருகின்ற வேளைகளில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறுவதை ஜனாதிபதி ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் | Solution To The Ethnic Problem By New Constitution

இந்த விதத்தில்தான் கடந்த 21ஆம் திகதி மேற்படி கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலகத்தில் நடைபெற்றது.

ஊடகங்களின் செய்திகளின்படி மயிலத்தமடு காணிப்பிரச்சினை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை, கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டதாகவும் அவற்றைச் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதில் கலந்துகொண்ட சம்பந்தன், “வடக்கும் கிழக்கும் மீள இணைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய - இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் இல்லையேல் சர்வதேச உதவிளை நாடவேண்டியிருக்கும்” என்றும் கூறியதாக அறியமுடிகின்றது.

தேர்தலை குறிவைக்கும் ஜனாதிபதி

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, 2025இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியல் சாசனத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, தற்போது பதின்மூன்றாவது திருத்தத்தில் இருந்து பறிக்கப்பட்ட சில அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஆலோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் | Solution To The Ethnic Problem By New Constitution

அதாவது ஒரு விடயத்தை அவர் மிகவும் தெளிவாக கூறுகிறார். 2026ஆம் ஆண்டு முடிவடைந்தாலும் கூட தீர்வு கிடைப்பது சந்தேகமே என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசங்களை கோருகின்ற ஒரு விடயத்தைத்தான் எம்மால் பார்க்க முடிகின்றது.

அது மாத்திரமல்லாமல் ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எவ்வாறு வெற்றிகொள்வது அதற்குப் புலம்பெயர் தமிழர்களையும் வடக்கு - கிழக்குத் தமிழர்களையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது போன்ற சிந்தனைகளில் மட்டுமே ஜனாதிபதி ஈடுபடுகின்றார்.

காற்றில் பறக்கவிடப்படும் உறுதிமொழிகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அவரது முன்னுரிமைப் பட்டியலில் கிடையவே கிடையாது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இப்பொழுது புதிய இந்தியத் தூதுவர் இலங்கைக்கு வந்திருக்கின்றார். அவரை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்கின்றோம்.

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் | Solution To The Ethnic Problem By New Constitution

யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்கள் கடந்த பின்னரும் கூட, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சிங்கள அரச தரப்பினர் தயாராக இல்லை என்பதை புதிய இந்திய தூதுவர் தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்குக் கொடுக்கும் உறுதிமொழிகளும் டெல்லிக்குக் கொடுக்கும் உறுதிமொழிகளும் அடுத்த கனமே காற்றில் பறக்கவிடப்படுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப் போக்கைச் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் - என்றுள்ளது. 

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழக மாணவன் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழக மாணவன் பலி

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளம் உடைப்பெடுக்கும் நிலை: விவசாயிகள் அச்சம்

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் குளம் உடைப்பெடுக்கும் நிலை: விவசாயிகள் அச்சம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US