கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

M K Stalin Tamil nadu Sri Lanka Narendra Modi Kachchatheevu
By Amal Apr 03, 2025 03:48 PM GMT
Report

இலங்கைக்கு அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு  கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்(M.K.Stalin) வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து பிணையில் செல்ல அனுமதி

கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து பிணையில் செல்ல அனுமதி

சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் 

பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக 02.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

முன்னதாக, 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தமே, நீடிக்கும் இந்தப் பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கிறது.

கச்சத்தீவு பிரச்சினை தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல்! அமைச்சர் சந்திரசேகர்

கச்சத்தீவு பிரச்சினை தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல்! அமைச்சர் சந்திரசேகர்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

1974-ம் ஆண்டில், கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டபோது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை கடுமையாக எதிர்த்தனர்.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

28.06.1974 அன்று மத்திய அரச, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் இசைவின்றி கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக மறுநாளே, அதாவது 29.06.1974 அன்று, தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினமே அப்போதைய இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 03.10.1991, 03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இதே போன்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் திடீர் சோதனை

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் திடீர் சோதனை

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்றொழிலாளர்கள், கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021 ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

இதேவேளை 2024 ஆம் ஆண்டில், 530 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதேநேரம், 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 147 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது; அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன.

 நிரந்தரத் தீர்வு 

இலங்கையின் இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இந்திய கடற்றொழிலாளர்களை வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கான தீர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின் | Solution Problem Recover Katchatheevu Stalin Modi

எனவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பது மாத்திரமே என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US