திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொவிட் உறுதி
கம்பளை மாவத்துர இராணுவ மொழி பயிற்சி வகுப்பில் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
11ஆம் திகதி உயிரிழந்த இராணுவ சிப்பாய்க்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவை திணைக்களம் நேற்று உறுதி செய்துள்ளது.
இந்த மொழி பயிற்சி பாடசாலையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த இராணுவ வீரர் மயங்கி விழுந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளார்.
மதுஷங்க என்ற இந்த இராணுவ சிப்பாயின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மொழி பயிற்சி பாடசாலையில் ஏற்கனவே ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த இராணுவ பயிற்சி பாடசாலையில் தற்போது வரையில் இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர், மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 200 பேர் மொழி பயிற்சி பெற்று வருகின்றனர்.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan