களுத்துறையில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்
களுத்துறை - ஹொரணை பகுதியில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலுள்ள சிறிய குளத்திலிருந்து இன்று (29.01.2024) இராணுவ வீரரின் சடலத்தை அங்குருவத்தோட்ட பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எத்திலிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
உயிரிழந்த இராணுவ வீரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இராணுவ முகாமில் நடைபெற்ற உடற் பயிற்சியின் போது கலந்து கொள்ளவில்லை எனவும் தேடப்பட்ட போதும் அவர் காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இராணுவ வீரரின் வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
