கிளிநொச்சியில் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பம்
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி நேற்றைய தினம் (15) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளிடம் இருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் குறித்த சூரியமின்கல யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பூநகரி கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட செம்மன்குன்று பகுதியிலேயே இந்த பணி ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.
முன்னெடுக்கப்படும் பகுதிகள்
இந்த திட்டமிடமானது, வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகிறது.
கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் அதற்குள் அடங்குகின்றன.
மேலும், இந்த நிகழ்வில், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

தமிழ்நாட்டில் ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாவட்டத்தில் இருக்கிறது? News Lankasri
