வங்கிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் (Video)
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பகுதியில் வங்கி ஒன்றினுள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் பெரும் பரபரப்பை ஏற்பட்டடுள்ளது.
நேற்றையதினம்(07.06.2023) வங்கி பூட்டியிருந்த நிலையில் மாலை 4 மணியளவில் வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது.
5 மணி நேர போராட்டம்
இதனையடுத்து குறித்த பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடியதையடுத்து வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து அங்கிருந்து பாம்பை அகற்ற பொலிஸாருடன் இணைந்து முயற்சித்துள்ளார்.
எனினும் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் பாம்பு பிடிப்பர்கள் வரவழைக்கப்பட்டு
சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.