அறுவடை செய்யப்பட்ட நிலங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை - பலர் சிரமம்
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியின் கந்தளாய் பகுதியில் அறுவடை செய்த வயல் நிலங்களுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட புகையால் அப்பகுதியினர் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கந்தளாய், பேராற்றுவெளி பகுதியிலுள்ள வயல் நிலங்களில் அறுவடை மேற்கொண்டு விட்டு இவ்வாறு வயலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பாரிய புகை மண்டலம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வீதியூடாக பயணித்தவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்தோடு அப்பகுதியில் வீடுகளில் இருந்தவர்களும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.