கோட்டாபயவின் உரையை வரவேற்ற எதிர்கட்சி உறுப்பினர்!
கோட்டாபய ராஜபக்சவின் அக்ராசன உரை தொடர்பில் எதிர்கட்சி தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார், இந்த ஆதரவை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபயவின் உரையில் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டிய அவர், ஒரு விடயத்தில் மாத்திரம் அவருடைய கருத்துக்கு தாம் ஆதரவை வெளியிடுவதாக குறிப்பிட்டார்
இலங்கையின் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை அமைக்கும் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்தை தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட மரிக்கார் அந்த யோசனைக்கு தாம் தனிப்பட்ட ரீதியில் ஆதரவை தெரிவிப்பதாகவும் கூறினார்
இதன்மூலம் அதிகளனவானோர் பல்கலைக்கழகம் செல்லமுடியும். வெளிநாடுகளுக்கு செலவழிக்கப்படும் நிதி கட்டுப்படுத்தப்படும் மற்றும் வெளிநாட்டு வருமானம் கிடைக்கும் என்றும் மரிக்கார் தெரிவித்தார்