உலகின் அறிவுள்ள மாணவர்களுக்கான போட்டியில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுமி
அமெரிக்காவில் திறமை வாய்ந்த இளைஞர்களுக்கான மையம் சார்பில் நடத்தப்பட்ட உலகின் அறிவுள்ள மாணவர்களுக்கான' போட்டிகளில் இந்திய வம்சாவளி சிறுமி சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 76 நாடுகளை சேர்ந்த சுமார் 15,300 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பலகட்ட தேர்வுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள புளோரன்ஸ் கவுடினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நடாஷா பெரியநாயகம் (வயது 13) என்பவரே வெற்றிபெற்றுள்ளார்.
இவர் 2021-2022ம் ஆண்டுக்கான பட்டியலில், இரண்டாவது முறையாக, முதலிடம் பெற்றுசாதனை படைத்துள்ளார்.