வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை
வவுனியாவில் 21 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார்.
பருவகால மழை, கடந்த வருட இறுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இந்த வருட ஆரம்பத்தில் பெய்த மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் அவற்றின் நீர் கொள்ளவினை எட்டியுள்ளது.
இதன் காரணமாக கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக அளவினை விட இம்முறை ஐயாயிரம் ஏக்கர் அளவில் மேலதிகமாக சிறுபோகம் நெற் செய்கை மேற்கொள்ளப்டவுள்ளது.
சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள்
அதன்படி, 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam