மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ரி20 இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எதிர்வரும் T20 சர்வதேச (T20) தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இந்த அணி தெரிவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) அனுமதி வழங்கியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மைதானம்
ரி20 தொடர் ஜூன் 24, 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் ஹம்பாந்தோட்டையில் உள்ள மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (MRICS) நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆட்டமும் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியலில் சாமரி அத்தபத்து (அணித்தலைவர்) விஷ்மி குணரத்ன, ஹர்ஷித சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, ஓஷாதி ரணசிங்க, இனோஷி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி, அமா குமாரி, துலானி, ஷஷினி கிம்ஹானி, காவ்யா கவிந்தி, சசினி நிசன்சலா, கௌஷினி நுத்யங்கனா போன்றோர் உள்ளடங்குவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 10 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
