அரசுக்கு எதிராக மே 22 இல் பேரணி: மொட்டுக் கட்சி அறிவிப்பு
தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக, எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று(24.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "இம்முறை மே மாதம் முதலாம் திகதி வெசாக் தினமாக அமைவதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மே தின ஊர்வலங்களை நடத்தப் போவதில்லை.
பேரணி
அதற்குப் பதிலாக, உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு ஆசீர்வாதம் வேண்டி நாடு தழுவிய ரீதியில் விசேட ஆசீர்வாத பூஜைகளை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் முறையற்ற நிர்வாகத்தினால் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மக்கள் போராட்டத்தை நாம் முன்னெடுப்போம்.
இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள், இன்று தமது தீர்மானத்திற்காகப் பெரிதும் வருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்." - எனக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam