இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் திடீரென ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் வெளிநாட்டு கையிருப்பும் மற்றும் அந்திய செலவணி அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. மே மாத கையிருப்பு 1920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவாகியிருந்த 1812 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களின் பின்னர் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி அதிகரிப்பு
இதேவேளை, மே மாதத்தில் இலங்கையின் அந்நிய செலாவணியிலும் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி 1602 அமெரிக்க டொலரில் இருந்து 1805 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
