இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அணியின் முடிவுகள்
இந்த ஆண்டு உலககிண்ணத் தொடரில் இலங்கை அணி எடுத்த முடிவுகள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா (Shammi Silva) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமாக விளையாடியதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் சில்வா கூறியுள்ளார்.
முன்னணி கிரிக்கெட் சபை
மேலும், தான் அந்த இடத்தில் இருந்திருந்தால் இது போன்ற முடிவுகளை தவிர்த்திருப்பேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆடுகளத்தின் புரிதல் இலங்கை அணிக்கு குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் சபை நிதிப்பற்றாக்குறைகளை எதிர்கொண்டதாகவும் தற்போது அதிக வருவாய் உழைக்கும் முன்னணி கிரிக்கெட் சபைகளில் இலங்கை கிரிக்கெட் சபை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
