என்னை வாளால் வெட்டியவர்கள் மீது வானை ஏற்றியே கொலை செய்தேன்: சந்தேகநபர் வாக்குமூலம்
பளை பகுதியில் தன்னை வாளால் வெட்டிக்காயப்படுத்தியவர்களை வாகனத்தினை விட்டு மோதி கொலை செய்ததாக சந்தேகநபரொருவர் வாக்குமூலம் அளித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திரபுரம் பகுதியில் ஏ - 9 வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர் உடலில் வெட்டுக்காயங்களுடன் பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து விசாரணையில் பல விடயங்களை வெளியிட்டுள்ளார்.
சந்தேகநபர் வாக்குமூலம்
இந்நிலையில் சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், விபத்து சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனது வீட்டுக்கு மதுபோதையில் வந்த 3 பேர் தன்னுடன் தகராறில் ஈடுபட்டு தன்னை வாளால் வெட்டிக்காயப்படுத்திவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்த நபர் தனது வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்த போது ஏ - 9 வீதியில் தன்னைத் தாக்கிய மூவரும் நின்றதினை அவதானித்து வாகனத்தை விட்டு அவர்களை மோதித்தள்ளி சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபர்
வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



