உலகக் கிண்ணப் போட்டித் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை
உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டித் தொடரினை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்ற முதல் போட்டி இன்றைய தினம் ஆர்.பிரேமதாச மைதனாத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அயர்லாந்து அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தப் போட்டியில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்து அணி சார்பில் பெரி மெக்கார்த்தி மற்றும் ஜோர்ஜ் டொக்ரால் ஆகீயோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் ஹரி டெக்டர் 40 ஓட்டங்களைப் பெற்றுக்காண்டார்.
பந்து வீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam