இறுதிப்போட்டியில் சிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
புதிய இணைப்பு
3 போட்டிகள் கொண்ட இலங்கை - சிம்பாப்வே 20 - 20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்படி, இலங்கை அணி 2-1 என போட்டியை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி இலங்கை அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கியது.
அதன்படி சிம்பாப்வே அணி 14 ஓவர்கள் ஒரு பந்தில் 82 ரன்கள் மட்டுமே பெறுகிறது.
பதில் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 10 ஓவர்கள் 05 பந்துகளில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாம் இணைப்பு
3 போட்டிகள் கொண்ட இலங்கை - சிம்பாப்வே 20 - 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 83 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.
இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியுடன் 1க்கு 1 என்ற அடிப்படையில் சமனிலை வகிக்கின்றன.
இந்தநிலையில், இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமைந்துள்ளது.














புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
