இலங்கை - இங்கிலாந்து மோதும் இன்றைய போட்டி! தாக்கம் செலுத்தும் வானிலை..
ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மழையினால் பாதிக்கப்படுமா என்ற அச்சம் காணப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்வதற்குரிய வாய்ப்புக்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
T20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் எட்டு சுற்றில் இலங்கையின் முதல் போட்டி இன்னும் சில மணிநேரங்களே உள்ளன.
இலங்கைக் வெற்றி கிட்டுமா..??
மத்திய மாகாணத்தில் இன்று (22) மதியம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தாலும், இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஏற்கனவே பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் ஆறு முறை மோதியுள்ளன, அவற்றில் ஐந்து முறை இங்கிலாந்து வென்றுள்ளது.
இதன்படி, டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான 14 ஆண்டுகால தோல்வியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இலங்கை இன்று போட்டியில் களமிறங்குகிறது.

