இலங்கையை ஆட்டங்காணச் செய்துள்ள ட்ரம்ப் - மூன்று நாளில் 435 பில்லியன் ரூபா இழப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் பாரிய சரிவைச் சந்தித்துள்ளன.
மேலும் ஆசியாவில் உள்ள பல பங்குச் சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் ஒரே பங்குச் சந்தையான கொழும்பு பங்குச் சந்தையும், ஜனாதிபதி ட்ரம்பின் முடிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை
கடந்த 3 வர்த்தக நாட்களுக்குள் பாரிய சரிவை சந்தித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி வர்த்தக முடிவில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 16,007.44 சுட்டெண்களாக பதிவாகியிருந்தது.
இது நேற்றையதினம் 14,660.45 புள்ளிகளாக பாரிய சரிவைப் பதிவு செய்தது. இந்த 3 வர்த்தக நாட்களில் மட்டும், கொழும்பு பங்குச் சந்தை 1,346.99 புள்ளிகள் அல்லது 8.41 சதவீதம் சரிந்துள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் 2 ஆம் திகதி நிலவரத்திற்கமைய, 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகிய கொழும்பு பங்குச் சந்தை, நேற்று வரையில் 5,253.18 பில்லியனாக குறைந்துள்ளது.
பொருளாதார ஆய்வாளர்கள்
இந்த 3 நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபா அல்லது 43,537 கோடி ரூபாய் கொழும்பு பங்குச் சந்தைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் பங்குச் சந்தைக்கு 227 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவொரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக, பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
