இலங்கை- ரஷ்ய விவகாரம் : மைத்திரி வெளிட்ட தகவல்
“நமது ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவை அச்சுறுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இன்று நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
I believe our continued close cooperation would be significant for us in facing the current socio-economic issues arising in the globe. @RusEmbSriLanka
— Maithripala Sirisena (@MaithripalaS) June 6, 2022
சோவியத் காலத்தில் இருந்து ரஷ்யா நமது பழைய நண்பன் எனவும் நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்தே ரஷ்யாவுடனான வரலாற்று உறவு மேலும் பலப்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகில் எழும் தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதில் எங்களின் தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விமானத்திற்கு எதிரான தடையை இடைநிறுத்தி அதிரடி உத்தரவு |