கடனை அடைக்க மீண்டும் சீனாவிடம் கடன் வாங்கும் இலங்கை!
இலங்கையின் கடனை கட்டமைக்கும் நோக்கத்திற்காக மீண்டும் சீனாவுடன் புதிய கடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இது சீனாவுக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதை மாத்திரம் நோக்காக கொள்ளாமல் வேறு நோக்கத்துக்காக பயன்படுத்தும் வகையில் புதிய கடனைப் பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வடிவத்தில் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சீனா, இலங்கைக்கு உதவும் என்று ஒரு புரிதல் உள்ளது என்று கப்ரால் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக டொலர் வசதியை ஏற்படுத்த இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.
"எனவே இது எங்களை ஊக்குவிப்பதோடு, அந்த நாடுகளுக்கு திருப்பிச் செலுத்துவதற்கும் உதவும் மற்றும் அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அதிக வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒரு ஏற்பாடாகும்" என்று மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று வலியுறுத்திய அவர், கடன் இலாகாக்களை சரிசெய்வது இப்போது கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
மார்ச் மாத இறுதிக்குள், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இலங்கை மத்திய வங்கி புதிய பொருளாதார திட்டத்தை அறிவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri