கோட்டாவுக்கும் சஜித்துக்கும் இடையில் கடிதப்போர்! மீண்டும் கடிதம் அனுப்பியுள்ள சஜித்!
பிரதமர் பதவி குறித்த ஜனாதிபதியின் விளக்கக் கடிதத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பதிலளித்துள்ளார்.
அதில், மக்களின் ஆணையை நேரடியாகப் புறக்கணித்து ஜனாதிபதி நியமிக்கும் உத்தேச அமைச்சரவைக்கு எந்தவொரு உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும் அரசாங்கத்தில் மாத்திரமே தம்மால், பிரதமராக பணியாற்ற முடியும் என்று சஜித் தெரிவித்துள்ளார்.
அத்துடன்;, பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த போது, அதனை மறுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, மக்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் ஜனாதிபதியை காலவரையறையின்றி, அந்த பதவியில் இருக்க அனுமதிக்கும் வேலைத்திட்டமொன்றில் பிரவேசிப்பது மக்களின் ஆணைக்கு பாரிய அடியாகும் என தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri