அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- 4ஆம் திகதி நாடாளுமன்றில்
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி விரைவில் தேர்தலை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது.
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரை பிரதான எதிர்க்கட்சி, இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விதானகே குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
