சஜித்தை விடுத்து கட்சி உறுப்பினர்கள் ஐ.தே.க மாநாட்டில்..!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழு கலந்துகொள்ளும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்ததற்காக
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா இன்று(20.09.2025) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த ஆண்டு நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்ததற்காக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்கள் மீதான அனைத்து தடைகளையும் நீக்க ஐக்கிய தேசியக் கட்சி சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, இன்று நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழு பங்கேற்க உள்ளது. இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்துகொள்வார்கள் எனத் தெரியவருகின்றது.
கட்சியின் வாழ்த்துச் செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்தும பண்டார இந்த விழாவில் பங்கேற்கச் செல்கின்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri