ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவை நகர்மன்ற உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொலன்னாவை நகரமன்றத்துக்குத் தெரிவான உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிடகே சுசில் குமார கொஸ்தா என்பவரின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இடைநிறுத்தம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ நகர சபையின் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவுக்கு இணங்கச் செயற்படாததால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 மணி நேரம் முன்
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam