மட்டக்களப்பு எல்லையில் ஆறு பேரை கடத்தி கட்டி வைத்து அடித்துள்ளதாக தகவல்
மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை இன்று காலை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கட்டி வைத்து அடித்ததுடன் அவர்களை அடையாளம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்று விட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் ஆறு பண்ணையாளர்களை இன்று காலை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கட்டி வைத்து அடித்ததுடன் பின்னர் அவர்களுடைய தொலைபேசிகளையும் பறித்து வைத்தவுடன் அவர்களுடைய தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து அடையாளம் தெரியாத இடத்திற்கு கடத்திச் சென்றுவிட்டதாக நேரில் கண்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலை மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட 6 பண்ணையாளர்களையும் தேடிச் சென்ற சக பண்ணையாளர்களையும் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டு வருபவர்கள் அச்சுறுத்தி துரத்தியதாகவும் அதனால் பண்ணையளர்கள் அச்சத்தில் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றிரவு இனம் தெரியாதவர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து பண்ணையாளர்களை அச்சுறுத்தியதாகவும், பண்ணையாளர்களின் குடியிருப்புக்களை சோதனை செய்து ஆயுதங்கள் வைத்து இருக்கிறீர்களா என கேட்டு அச்சுறுத்தியதாகவும் அவ்விடத்தில் இருந்த பண்ணையாளர்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கரடியணாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam