வெகு விரைவில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக சிவாஜிலிங்கம்
வெகு விரைவில் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அப்புலிங்கம் உதயசூரியன் தானாக முன்வந்து பதவி விலகல் செய்துள்ளார்.
இதனூடாக மூத்த அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக சபைக்குள் செல்வதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளார்.
பாராட்டு
அவரது தன்னலமற்ற முன்மாதிரியான செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று 28-09-2025 வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு உரையாற்றும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உதயசூரியனுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam