ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை - எம்.கே.சிவாஜிலிங்கம்
ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை என இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசுடன் பேசுவதாக இருந்தால் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தான் பேச வேண்டும்.
ஒரு போதும் இலங்கை அரசை நம்பத் தயாரில்லை. இலங்கை அரசுடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு சமம்.
நடந்த இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.