இலங்கைக்கு ஊழல் அற்ற நிலைமைவேண்டும்: சிறிநாத் சுட்டிக்காட்டியுள்ளார்
இலங்கைக்கு ஊழல் அற்ற, வன்முறைகள் அற்ற ஒரு நிலைமைவேண்டும் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்களிப்புகள் மிக தெளிவாக தெரியப்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள இ.சிறிநாத் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு,செங்கலடியில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியத்தினை நேசித்து தமிழரசுக்கட்சிக்கும் எனக்கும் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதுடன் இலங்கை முழுவதுமே மாற்றம் என்ற அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கின்றபோது அந்த மாற்றத்தினை தமிழ் தேசியத்தின் ஊடாக வழங்கமுடியும் என்ற நம்பிக்கையினை மக்கள் எம்மீது கொண்டிருக்கின்றார்கள்.
ஊழல் அற்ற,வன்முறை
அந்த வகையில் முழு இலங்கைக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஊழல் அற்ற,வன்முறையற்ற நிலைமைவேண்டும் என்பதை தெளிவாக தெரியப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் நடைபெற்ற வன்முறை,ஊழல்களை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள். அதனுடன் இணைந்ததாக தமிழர்களின் அபிலாசைகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri