நாட்டில் பியர் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் பியர் விற்பனையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில வகை பியர் உற்பத்திகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பியர் வகைகளின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்திகள் ஏற்றுமதி
உள்நாட்டு மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மதுபான ஏற்றுமதியினால் 22 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெறுவதாகவும் இதனை 30 - 35 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதனோல் விலை அதிகரித்துச் சென்ற நிலையில் தற்பொழுது கிரமமாக எதனோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri