நாட்டில் பியர் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் பியர் விற்பனையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில வகை பியர் உற்பத்திகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பியர் வகைகளின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
உள்நாட்டு உற்பத்திகள் ஏற்றுமதி
உள்நாட்டு மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மதுபான ஏற்றுமதியினால் 22 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெறுவதாகவும் இதனை 30 - 35 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதனோல் விலை அதிகரித்துச் சென்ற நிலையில் தற்பொழுது கிரமமாக எதனோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
