அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துகின்றனர்: மல்வத்து மகா நாயக்கர்
ஒரு சில அரசியல்வாதிகளே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக மல்வத்து மகாநாயக்க தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று (18.03.2023) கண்டியில் மல்வத்து மகா நாயக்க தேரர் திப்படுவாவே சுமங்கல தேரரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன்போது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து மகாநாயக்க தேரர் நன்றி தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் ஏற்படும் பிளவுகள்
இலங்கையில் நீண்ட காலமாக சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் நல்லுறவுடன் இருப்பதாகவும், ரிதீகம மற்றும் கண்டி முஸ்லிம் பள்ளிவாசல்கள் பௌத்த விகாரைகளின் காணிகளிலேயே அமைக்கப்பட்டிருப்பதாகவும் மல்வத்து மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருசில அரசியல்வாதிகளே பிளவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri