அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துகின்றனர்: மல்வத்து மகா நாயக்கர்
ஒரு சில அரசியல்வாதிகளே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக மல்வத்து மகாநாயக்க தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று (18.03.2023) கண்டியில் மல்வத்து மகா நாயக்க தேரர் திப்படுவாவே சுமங்கல தேரரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன்போது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து மகாநாயக்க தேரர் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் ஏற்படும் பிளவுகள்
இலங்கையில் நீண்ட காலமாக சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் நல்லுறவுடன் இருப்பதாகவும், ரிதீகம மற்றும் கண்டி முஸ்லிம் பள்ளிவாசல்கள் பௌத்த விகாரைகளின் காணிகளிலேயே அமைக்கப்பட்டிருப்பதாகவும் மல்வத்து மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருசில அரசியல்வாதிகளே பிளவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 22 மணி நேரம் முன்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
