அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துகின்றனர்: மல்வத்து மகா நாயக்கர்
ஒரு சில அரசியல்வாதிகளே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக மல்வத்து மகாநாயக்க தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று (18.03.2023) கண்டியில் மல்வத்து மகா நாயக்க தேரர் திப்படுவாவே சுமங்கல தேரரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன்போது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து மகாநாயக்க தேரர் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் ஏற்படும் பிளவுகள்
இலங்கையில் நீண்ட காலமாக சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் நல்லுறவுடன் இருப்பதாகவும், ரிதீகம மற்றும் கண்டி முஸ்லிம் பள்ளிவாசல்கள் பௌத்த விகாரைகளின் காணிகளிலேயே அமைக்கப்பட்டிருப்பதாகவும் மல்வத்து மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருசில அரசியல்வாதிகளே பிளவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
